Saturday, 11 March 2023

communism

[3/11, 9:26 PM] Jagadeesh Krishnan: *கம்யூனிசவாதிகளின் கம்யூனிசம்*

ஒரு கம்யூனிசவாதியிடம் ஒருவன் கேட்டான்

உங்களிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தால்
சக தோழர்களுக்கு பகிர்ந்தளிப்பீர்களா என

அந்த கம்யூனிசவாதி உடனே
பகிர்ந்தளித்துவிடுவேன் என்றான்.

இவன் மீண்டும் கேட்டான்

சரி உங்களிடம் பத்து கோழி இருந்தால் பகிர்ந்தளிப்பீர்களா?

உடனே அவன் (கம்யூனிசவாதி)
முடியவே முடியாது என்றான்.

இவன் கேட்டான் ஒரு கோடியை பகிர்ந்தளிக்க தயாராக இருக்கும் நீங்கள்

பத்து கோழியை ஏன் பகிர்ந்தளிக்க தயாராயில்லை என

அவன் (கம்யூனிசவாதி) சொன்னான்

உண்மையிலேயே பத்து கோழிகள் என்னிடம் உள்ளது என்றான்.

இதுதான் கம்யூனிசம்.ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[3/11, 9:27 PM] Jagadeesh Krishnan: *Communism by Communists*

 one asked a communist

 If you have one crore rupees
 Would you like to share it with your colleagues?

 That communist immediately
 He said he will distribute it.

 Ivan asked again

 Well, if you have ten chickens, would you share?

 Immediately he (communist)
 He said that it cannot be done.

 Ivan asked, are you ready to share one crore

 Why are you not ready to share ten chickens?

 He (the communist) said

 He said that I really have ten chickens.

 This is Communism. Jagadeesh Krishnan is a psychologist and international author

Monday, 6 March 2023

jagadeesh

எனக்கு ஒரு கடிதம் வந்தது.

 அதில் நீங்கள் ஏன் சில மருத்துவமனைகளை,சில பள்ளிகளை திறந்து நடத்தக் கூடாது 

நீங்கள்  உங்களது சன்யாசிகளுக்கு
 ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதை ஏன் போதிக்ககூடாது என்று கேட்டிருந்தது. 

ஏழைகள் உதவி பெற்றுக் கொண்டேதான் இருக்கிறார்கள்,ஆனாலும் அவர்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.

ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் ஏழ்மையை ஒழித்து விட முடியாது. 

அது மட்டும் நிச்சியம். 

வாழ்க்கையை பற்றிய ஒரு புதிய பார்வையை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் மட்டுமே ஏழ்மையை ஓழிக்க முடியும். 

அவர்களது கருத்துகள் அவர்களை ஏழையாக்குவதால் அவர்கள் ஏழையாக இருக்கின்றனர், வாழ்க்கையை பற்றிய அவர்களது கண்ணோட்டம் அவர்களை ஏழையாக்குவதால் அவர்கள் ஏழையாக இருக்கின்றனர்.

 அவர்கள் ஏழையாக இருப்பது அவர்களால்தான். 

அவர்களுக்கு கருணை தேவையில்லை, அவர்களுக்கு தேவை கல்விதான்.

 அவர்களுக்கு சேவை தேவையில்லை, அவர்கள் விழிக்க வைக்கப்பட வேண்டும்.

 ஆனால் யாரும் தங்களது கனவிலிருந்தும் தூக்கத்திலிருந்தும் வெளி வர விரும்புவதில்லை.

 எனவேதான் அவர்களுக்கு என்மேல் ஆத்திரம் வருகிறது.

மருத்துவமனைகள் இருக்கின்றன, மேலும் சிலது வரலாம், பள்ளிகள் இருக்கின்றன, மேலும் சிலது திறக்கலாம், ஆனால் அது அவர்களுக்கு உதவப் போவதில்லை. 

இது கடலில் சில கரண்டி வண்ணங்களை கரைப்பது போன்றது,

 இதனால் கடலின் நிறம் மாறப்போவதில்லை.

நாம் முழு அடிப்படையையே மாற்ற வேண்டும். 

ஏன் இந்தியா பல நூற்றாண்டுகளாக ஏழ்மையிலேயே இருக்கிறது

 காரணம் மிகவும் ஆழமானதாக இருக்க வேண்டும். 

காரணம் இந்திய மனம் பணத்திற்கு/வாழ்விற்கு எதிரானது. 

இது பிளவுபட்டிருக்கிறது, இந்த உலகம் அந்த உலகம் என்று பிரிந்திருக்கிறது.

 பொருளுலகத்திறக்கு எதிரானது இந்திய மனம் இதுதான் காரணம்.

 நீ பொருளுலகத்திற்கு எதிராக இருந்தால் இயல்பாகவே நீ ஏழையாகத்தான் இருப்பாய். 

அது உனது முடிவு. 

உனது விதியை நீயேதான் முடிவு செய்கிறாய்.

உண்மையான ஆன்மீகம் விஞ்ஞான ரீதியான பொருளுலகத்தை சார்ந்தது.

 பொருளும் சுயஅறிவும் இரண்டு விஷயங்கள் அல்ல, உடலும் சுயஅறிவும் வேறுபட்டது அல்ல, அவை ஒன்றேதான்.

 இந்த உலகம் விரும்பப்பட வேண்டும், பின்பு இந்த உலகம் தன்னை வெளிபடுத்தும், தன் ரகசியங்களை உனக்கு தெரியப்படுத்தும்.

மேலை நாடுகள் ஒரு தவறு செய்தன, அதனால் அங்கே ஆன்மீகம் இல்லை, பொருளுலகம் மட்டுமே இருக்கிறது,

 அதனால் அவர்களது அடிப்படை தேவைகள் பூர்த்தியாகி விட்டன, ஆனால் அவர்களது உயரிய தேவைகள் அவர்களை தொந்தரவு செய்கின்றன,

 அது அவர்களை தற்கொலை வரை செலுத்துகிறது அல்லது பைத்தியம் பிடிக்கிறது. 

கீழை நாடுகள் வேறொரு தவறு செய்கின்றன. 

இங்கே பொருளுலகம் இல்லாமல் ஆன்மீகம் மட்டுமே இருக்கிறது.

 அதனால் இது ஒரு ஆவி போலாகி விட்டது, உடல் இன்றி அலையும் ஒரு ஆவி போலாகி விட்டது. 

மேற்கு உயிரின்றி உடல் மட்டுமே உள்ள ஒரு எலும்புக்கூடு போல, கிழக்கு உடல் இன்றி அலையும் ஆவி போல இருக்கின்றன.

என்னுடைய முயற்சி என்னவென்றால் கிழக்கையும் மேற்கையும் அருகருகே கொண்டு வந்து இணைத்தால் அப்போது எல்லோரிடமும் உடலும் உயிரும் இருக்கும்.

 ஆன்மீகமும் பொருளுலகமும் ஒரே வாழ்வின் இரண்டு பார்வைகள்.

 அப்போது ஏழ்மை மறைந்து விடும். 

இந்த உலகம் தேவையான அளவு வளமாகவே உள்ளது,

 மனிதனின் புத்திசாலித்தனம் உள்ளது – நாம் இதை இன்னும் அதிக அளவு வளப்படுத்தலாம்.

ஆனால் நீங்கள் இங்கே கம்யூனில் அதிக அளவு இந்தியர்களை பார்க்க முடியாது. 

சிலரே இருப்பர். 

அடிப்படை தேவைகள் பூர்த்தியானாலும்கூட திருப்தியாக இருக்க முடியாது என்பதை பார்க்கும் அளவு புத்திசாலிகளாக இருக்கும் சிலரே இங்கு இருப்பர். 

இவர்கள் கிழக்கத்தியநாடுகளில் பிறந்திருந்தாலும்கூட முன்னேற்றமடைந்தவர்கள், நிகழ்கால மனம் படைத்தவர்கள். 

இவர்கள் மேற்கத்திய நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பவர்கள்.

 இந்தியா செல்வ செழிப்படைந்தாலும்கூட இதுதான் நடக்கப் போகிறது. 

மேற்கத்திய நாடுகளில் மகிழ்ச்சி இல்லை, இந்தியா வளமடைந்தாலும்கூட இங்கும் மகிழ்ச்சி இருக்காது. 

அதனால் மகிழ்ச்சி வேறு பரிமாணங்களில் தேடப்பட வேண்டும்.

Jagadeesh Krishnan psychologist and international author 

jagadeesh

இப்பொழுது நான்  ஜீசஸைப் பற்றிச் சொல்லப்போகிறேன் . 

இதைக் கிறிஸ்துவர்கள் ஒருக்காலும் நம்பமாட்டர்கள் . 

அதுபற்றி எனக்குக் கவலை இல்லை .

 இதை நம்புவதும் , நம்பாததும் அவர்களது இஷ்டம் .

 ' ஆனந்தமாக - மகிழ்ச்சியாக - சிரிப்பாக இருங்கள் ' என்று சொல்லுவதற்கு ஒரேவிதமான வார்த்தையை உபயோகித்த ஒரு வித்தியாசமான ஆள் ஜீசஸ்தான் . 

அந்த வார்த்தை REJOICE . 

ஆனால் நீங்கள் சர்ச்சுக்குள் நுழைந்ததும் , யாரைச் சந்திக்கிறீர்கள் ?

 தொங்கிய - நீண்ட - இறுக்கமான முகத்தையுடையவர்களைத்தான் .

 நீங்கள் ஜீசஸுக்காக அங்கு துக்கம் அனுசரிக்கிறீர்கள் !

 இவர்கள்தான் ஜீசஸை நம்புபவர்கள் , ஆதரிப்பவர்கள் . 

இவர்களது வழியில் வந்தவர்கள்தான் அந்த அற்புதமான மனிதனைச் சிலுவையில் அறைந்தார்கள் .

 இப்பொழுது உள்ளவர்கள் அவரது சவப்பெட்டியில் புதிய ஆணியை அடிக்க வந்திருக்கிறார்கள் !

அவர் காப்பாற்றப்பட்டு , காஷ்மீருக்கு வந்து வாழ்ந்து அடக்கமானது குறித்து ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன் .

 இவர் இறந்தது காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் . 

இது எனக்கு நிச்சயமாகத் தெரியும் .

 யூதர்களின் மூதாதையர்கள் காஷ்மீரில்தான் இருந்தார்கள் .

காஷ்மீர்தான் யூதர்களின் தாயகம் ; இஸ்ரேல் அல்ல !

 இங்கிருந்துதான் யூதர்கள் நாடோடிபோல இஸ்ரேலுக்குச் சென்றார்கள் . 

மோசஸும் இங்கு வந்துதான் சமாதியானார் ! 

இப்பொழுது இவர்கள் இருவரது சமாதியும் பஹல்காமில் இருக்கிறது !

 இதை யூதர்களின் சந்ததியினர் பாதுகாத்து வந்தார்கள் .

 இந்த இரண்டு சமாதிகளுக்கும் பக்கத்திலேயே பஹல்பாபாவின் சமாதியும் இருக்கிறது ! 

பழங்கால காஷ்மீரிகள் யூதர்கள்தான் , ஹிந்துவோ , முஸ்லீமோ அல்ல !

 ஆனால் , பிறகு இவர்களில் பெரும்பாலோர் ஹிந்துக்களாக மாறினார்கள் -

 ஆரியர்களின் வருகைக்குப் பிறகு ! பிறகு இவர்களில் பெரும்பாலோர் முஸ்லீம்களானார்கள் !

 இந்திராகாந்தியின் மூக்கைப் பாருங்கள் ! அசல் யூத மூக்கு !

 மோதிலால் நேருவின் மூக்கும் அப்படித்தான் ! 



நான் ஜீசஸின் சமாதியை காஷ்மீரில் பார்த்திருக்கிறேன் .

 இந்தப் பெருமை எல்லாம் ரோமானியன் பிலோத்துக்குத்தான் போய் சேரவேண்டும் ! 

எனக்கு எப்பொழுதுமே கல்லரைகளை ஆராய்ச்சி செய்வது மிகவும் பிடிக்கும் .

 ஆரம்பத்தில் காஷ்மீரிலிருந்து கிளம்பிய ஒரு யூதக் கூட்டம் எங்கே சென்றது என்று தெரியவில்லை . 

ஏன் வளமிக்க காஷ்மீரில் இருந்து இவர்கள் கிளம்பினார்கள் என்ற காரணம் சரியாகத் தெரியவில்லை .

 அவர்கள் சென்று 40 வருடத்திற்குப் பிறகு அவர்களைத் தேடி மோசஸ் ஒரு கூட்டத்தோடு புறப்பட்டார் .

 பாலைவனத்தில் கால்நடையாகச் சென்று , இஸ்ரேலை அவர் அடைந்து சில ஆன்மீக புத்திமதிகளைச் சொன்னார் .

 அதுதான் அந்த பத்துக் கட்டளை !

 ஆனால் , அவர்கள் யாரும் இதற்கு மதிப்பு கொடுக்கவில்லை .

 பிறகு அவர் மிகவும் வருத்தமுற்று , எப்படியோ போகட்டும் என்று காஷ்மீருக்குத் திரும்பி வந்து அடக்கம் ஆகிவிட்டார் . 

இதைப் போலத்தான் ஜீசஸும் திரும்ப காஷ்மீருக்கு வந்திருக்கிறார் . இது என்னுடைய அபிப்பிராயம் .

அந்த இரண்டு கல்லரைகளும் யூத முறைப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன .

 ஒரு முகமதியனின் கல்லறையின் தலைப்பாகம் மெக்காவை நோக்கி இருக்கும் . 

ஆனால் இந்த இரண்டு கல்லறைகளும் வேறு கோணத்தில் இருந்தன .

 மோசஸின் சமாதியில் ' மோசா ' ( MOSHA ) என்று பொறிக்கப்பட்டுள்ளது . 

இது அராமிக் ( ARAMIC ) மொழி .

 அதைப்போல் ஜீசஸின் பெயரை ' யேசு ' ( YESU ) என்று பொறிக்கப்பட்டிருந்தது .

 இது ஹீப்ரூ (HEBREW) மொழியாகிய ஜேசுவா ( JESUVA ) வின் மரூவு .

 வார்த்தைகளில் என்ன இருக்கிறது ?
By
Jagadeesh Krishnan psychologist and international author 

Thursday, 16 February 2023

jagadeesh Krishnan



" ஒருவர் புத்த ' லாமா ' ஆவது
சாதாரண நிகழ்வு அல்ல.

மிகவும் சிரமமானது.

நிறைய கடினமான கட்டுபாடுகள்,
சட்ட திட்டங்கள், 
மீளவே முடியாத கடுமையான விதி முறைகள் உள்ளன.

அதுவரையில் வாழ்ந்து வந்த வாழ்க்கை முறைகளையும்
ஆராய்ந்து பார்ப்பார்கள்.

அவர்களது தகுதி,
பெரும்பாலும்
பிரபஞ்சத் தத்துவங்களை படித்துணர்பவையாகவே
இருக்கும்.

ஒரு லாமாவை
 நாம் மலிவாக எடைபோட்டு விட முடியாது.

ஒரு உண்மையான ' லாமா '
வெளிப்புற தோற்றத்திற்கு ஒரு சாதுவாக நம்மிடம் பேசினாலும்,
வெளிக்காட்டிக் கொள்ளாத
அவர்களது தனிப்பட்ட
தகுதி, திறமை 
வியப்புக்குரியது.

இப்போது நான் சொல்லப்போகிற நிகழ்வு
முற்றிலுமே உங்களால் 
நம்ப முடியாதது.

ஏனென்றால்,
அதை நம்பும் அளவிற்கு யாருடைய மனமும் 
ஆன்மீகத்தில்
பக்குவம் அடையவில்லை.

இங்கு,
உங்களுக்கு அனைத்தும் விஞ்ஞானம்.

அனைத்தும் அறிவு சார்ந்த எண்ணங்கள்.

எனவே,
இதை நம்புவது கடினம்.

இருப்பினும்,
நான் சொல்லவந்த 
உண்மை நிகழ்வை சொல்லிவிடுகிறேன்.

'ஒருமுறை,
 நல்ல முறையில் 
பயிற்சி எடுத்து,
கடுமையான தவம் செய்து
உயர்ந்த எண்ணங்களில்
உறைந்திருக்கும் லாமாக்களில்,
அவர்களுக்குள்ளாகவே
வடிகட்டி,
மிக சிறப்பான
 500 லாமாக்களை
  தேர்ந்தெடுத்தார்கள்.

அந்த 500 லாமாக்களும்
தம் பிரக்ஞையற்ற மனதை உணர்ந்து கொண்டவர்கள்.

நினைத்த மாத்திரத்தில்,
30 சுவாசத்திற்குள்ளாகவே
நிரந்தர சமாதி நிலையை அடைந்துவிடும் தகுதி பெற்றவர்கள்.

அந்த சிறப்பு லாமாக்களின் எண்ணிக்கை
எப்போதுமே ஐநூறு தான்.

500 தாண்டுவதில்லை.

அவர்களுள்,
ஒருவர் சமாதி நிலை அடைந்தால் தான்,
அதேபோன்ற
வேறோரு தகுதி வாய்ந்த லாமா ' அதில் சேர்த்துக் கொள்ளப் படுவார்.

அவர்கள் 500 லாமாக்களும்,
ஒரு குறிப்பிட்ட பெளர்ணமி தினத்திற்கு
முன்னதாக,
இமயமலையை நோக்கி நடக்க ஆரம்பிப்பார்கள்.

சரியாக பெளர்ணமி தினத்தன்று,
இமயமலையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்து,
தவம் செய்ய ஆரம்பிப்பார்கள்.

அந்த தவத்திற்கு நடுவே,
500 லாமாக்களின் இடையே அந்த அதிசயம் நிகழும்.
ஒளி வடிவில் புத்தர் தனது சூக்கும உடலோடு,
அவர்களுக்கு காட்சித் தருவார்.

எப்படி இது நிகழ்கிறது ?

ஒவ்வொறு வருடமும்,
ஒரு குறிப்பிட்ட பெளர்ணமி தினத்தன்று,
தான் ( புத்தர் ) தோன்றி
 காட்சித் தரப்போவதாக,
தனது சீடர்களிடம் வாக்குறுதி அளித்திருந்தார் புத்தர்.

அதன்படியே,
புத்தரின் ஒளி வடிவ உடல் அவர்கள் முன் தோன்றி,
காட்சியளித்து வருகிறது.

அன்றைய தினம்தான்,
' புத்த பூர்ணிமா '

                    ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Thursday, 9 February 2023

jagadeeshkrishnan

இயேசு சொல்கிறார் ''என்னைப் பின்பற்றுங்கள்'' என.  

கிருஷ்ணரும் புத்தரும்  கூட அதையே தான் சொன்னார்கள். 

உலகின் எல்லா பழைய மதங்களும் இந்த சொல்லின் அடிப்படையில் உருவானவை தான். 

இந்த சொற்கள் மனோதத்துவரீதியாக மனிதனை அழிக்கும் சொற்கள்.

 நான் ''என்னை பின் தொடருங்கள்'' என சொல்லமாட்டேன். 

அவர்கள் இந்த சமுதாயத்தை முடக்கவும் உதவாக்கரையாக மாற்றவும் அப்படி சொல்கிறார்கள். 

மக்கள் தங்கள் சொந்த பாதையை தேர்ந்தெடுத்து நடக்க மறுக்கப்படுகிறார்கள். 

முதலில் உங்களை பணிய வைத்து உங்கள் கண்களை பிடுங்கிவிடுகிறார்கள். 

பிறகு நீங்கள் இயேசுவின் கண்களைக் கொண்டும் கிருஷ்ணனின் முகமதுவின் கண்களைக் கொண்டு மட்டுமே உலகை காண இயலும்.

உங்கள் சொந்த பார்வையை பறித்துக் கொண்டு உங்கள் கால்களைப் பறித்துக் கொண்டு அவர்களின் கண்களைக்கொண்டும் கால்களைக் கொண்டும் உன்னை இயங்கச் சொல்கிறார்கள். 

உனக்கென்று எந்த நம்பிக்கையும் இருக்கக் கூடாது. 

அவர்கள் மீதான  நம்பிக்கையே போதுமானது. 

உன்னை அழிக்கும் இது போன்ற செயல்கள் என்னைப் பொருத்த வரை பெருங்குற்றமாகும். 

நீ தனித்தன்மையானவன். 

ஒருவரை நீ பின்தொடரத் தொடங்கியவுடன் அவர் செயல்களை காப்பியடிக்க தொடங்குகிறாய். 

அதனால் உன் அடையாளத்தை இழந்து பத்தாம் பசலித்தனமானவனாக மாறிப்போகிறாய். 

நீ பிறர் வசமானவனாக மாறிப்போகிறாய். 

உனக்கு கிருஸ்தவ முகமூடியோ இந்து முகமதிய பவுத்த முகமூடியோ கிடைக்கும். 

அந்த முகமூடி நீ யாரை பின்தொடர எண்ணுகிறார்களோ அவர்களுடையது.

 உன்னுடைய உண்மை முகம் மறைந்து போகிறது. 

உனக்கு எதிரானவனாக நீயே மாறி ஒருவித நோயாளியாக மாறிப்போகிறாய்.

 அதற்கு பின் நீ பேசுவதெல்லாம் குற்றவாளிகளுடைய குரலாகவே இருக்கும். 

அது இயேசுவின் புத்தரின் கன்பூசியசின் குரலாகவே இருக்கும். 

எல்லா குழந்தைகளும் தன் பெற்றோரின் சுற்றத்தாரின் நண்பர்களின் ஆசிரியர்களின் செயல்களையே காப்பியடிக்கின்றன. 

அவையெல்லாம் குழந்தைகள் மீது திணிக்கப்பட்டவை. 

 நான் சிறுவனாக இருந்தபோது என்னை என் தந்தை கோயிலுக்கு அழைத்து செல்வது வழக்கம். 

நான் ஒரு விபத்தாக ஒரு ஜைன குடும்பத்தில் பிறந்துவிட்டேன்.  

அது உலகின் மிகப்பழமையான மதம்.

 என் தந்தை மிக நல்லவர். 

அவர் ''நான் இந்த கோயிலுக்கு வருகிறேன்..

 தலை தாழ்ந்து வணங்குகிறேன்.. பிரார்த்திக்கிறேன். 

ஆனால் என் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

அதனால் நான் உன்னை என்னை பின்பற்றி வணங்குமாறு சொல்லமாட்டேன்.

 உன் இஷ்டப்படி செய்' என்றார். 

நான் இதுவரை யாரையும் பின் தொடர்ந்ததில்லை. 

உலகின் மிகப்பெரிய துறவு என்பது யாரையும் பின்பற்றாமல் இருப்பது தான்.

 நான் நானாகவே இருக்கிறேன். 

உனக்கு அறிவு வளரவேண்டுமா?

 உண்மையை அறியவேண்டுமா? 

அதற்கு நீங்கள் இந்த புதுமுயற்சியை செய்து தான் ஆகவேண்டும்.

 இல்லாவிட்டால் உங்களை சுற்றியுள்ள விற்பனையாளர்கள் யாரையாவது பின் தொடரவேண்டியது தான். 

இயேசு ஒரு வியாபாரி.. 

அவர் ''என்னை பின் தொடருங்கள்'' என சொல்கிறார். 

என்னை பின் தொடர்ந்தால் நீங்கள் கடவுளைக் காணலாம்.. 

சொர்கத்தைக் காணலாம். 

அங்கே எல்லா இன்பங்களும் கிடைக்கும். 

என்னை பின் தொடராவிட்டால் இருளில் சிக்கி நரகத்திற்கு செல்வீர்கள். 

கடவுள் உங்களுக்கு உதவமாட்டார்.

 என்னுடன் வந்தால் எல்லாமே உங்களுக்கு தருவேன். 

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எந்த கேள்வியும் கேட்காமல்  என்னை நம்புவது தான். 

கிருஸ்தவர்கள் கடவுள் யார்? 

பரிசுத்த ஆவி யார்? 

என கேட்க மாட்டார்கள்.

பரிசுத்தமெல்லாம் அங்கே  கிடையாது.

அவர் ஒரு கற்பழிப்பாளர். கன்னி மேரியை கற்பழித்தவர்.

 கடவுள்(பிதா) மகன்(சுதன்) பரிசுத்த ஆவி 
என மும்மூர்த்திகளை விடுத்து அங்கே எந்த பெண்ணுக்கும் இடமில்லை. 

யாரும் நீங்கள் மட்டுமே கடவுளின் ஒரே குழந்தை என்பதற்கு என்ன ஆதாரம் என கேட்பதில்லை. 

இறந்த பின் சொர்கத்திற்கு செல்வாய் என சொல்கிறார்கள்.

 முகமதியர்கள் சொர்கத்தில் ஒயின் ஆறு ஓடுவதாக சொல்கிறார்கள். 

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம் குளிக்கலாம். 

 மேலும் அங்கே அழகான பெண்கள் இருப்பார்கள். 

அவர்களுக்கு வயது கூடுவதே இல்லை.

 என்றும் அவர்கள் பதினாராகவே இருப்பார்கள். 

அங்கே அழகான இளைஞர்களும் இருப்பார்களாம். 

இது ஒரு முட்டாள்தனமான சிந்தனை.

 இறந்தபின் என்ன நடக்கும் என யாருக்கு தெரியும்

. இறந்த பின் அங்கே என்ன நடந்தது என யார் திரும்பி வந்து சொல்லப்போகிறார்கள்.

 அதனால் சொர்கத்தை வைத்து நல்லதொரு வியாபாரத்தை இவர்கள் செய்து வருகிறார்கள். 

இதற்கு மயங்கி மக்கள் எல்லோரும் முட்டாள்களாக மாறி வருகிறார்கள்.

 அதனால் தான் சொல்கிறேன் ''என்னை யாரும் பின் தொடராதீர்கள். என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்'' என.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Sunday, 1 January 2023

Difficulties

[1/1, 6:58 PM] Jagadeesh Chandra krishna: முரண்பாடு தவிர்க்க முடியாதது என ஏற்றுக்கொள்கிறோம்.

குழந்தை பருவத்திலிருந்தே, நாம் மோதலை ஏற்றுக்கொள்கிறோம். பள்ளியில், நீங்கள் உங்களைவிட அதிக புத்திகூர்மை உடையவர்களுடன் போட்டியிடுகிறீர்கள். வளரும்போது, நீங்கள் உங்களுக்கு மேலே உள்ளவர்களுடன் அல்லது உங்கள் அண்டை வீட்டாருடன் போட்டியிடுகிறீர்கள். 

முரண் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

முரண் மரியாதைக்குரியதாகக் கருதப்படுகிறது, பரிணாம வளர்ச்சிக்கு, முன்னேற்றத்துக்கு தேவை - ஏதோவொன்றாக இருப்பதற்கு, ஏதோவொன்றாக மாறுவதற்கு.

இப்படித்தான் நாம் அனைவரும் சிந்திக்கிறோம். 
முரண் இல்லை என்றால், நாம் தேக்கமடைவோம் என்று உணர்கிறோம்.

எனவே மனரீதியாகவும், அறிவு ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், நாம் எப்போதும் கூர்மைப்படுத்துகிறோம், சண்டையிடுகிறோம். 

நாம் எப்போதும் நம்மோடும், நம் அண்டை வீட்டாரோடும், உலகத்தோடும் முரண்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[1/1, 6:59 PM] Jagadeesh Chandra krishna: We accept that conflict is inevitable.

 From childhood, we embrace conflict.  In school, you compete with people who are more intelligent than you.  Growing up, you compete with those above you or your neighbors.

 Contradiction is accepted.

 Contradiction is considered respectable, necessary for evolution, for progress—to be something, to become something.

 This is how we all think.
 Without conflict, we feel stagnated.

 So mentally, intellectually, emotionally, we are always sharpening and fighting.

 We are always at odds with ourselves, our neighbors, and the world.
By 
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

Wednesday, 21 December 2022

human

[12/22, 7:17 AM] Jagadeesh Chandra krishna: " ஒரு சாம்ராஜ்யத்தின் 
மிகப் பிரமாண்டமான அரண்மனை.

அரச சபை இல்லாத,
ஒரு தனியிடம்.

மன்னன், மகாராணி,
அவளது மடியில்
மிக அழகான குழந்தை.

அந்த குழந்தையின் ஜாதகத்தை படிக்கிறார்,
அரண்மனை ஜோதிடர்.

' இந்த குழந்தைக்கு உங்கள் அரசை ஆளும் அமைப்பு இல்லை.
அனைத்தையும் துறந்து சென்று விடக்கூடிய
ஒரு   'சந்நியாசி ' ஜாதகம் '

மன்னர் கலக்கமடைகிறார்.

'சுகபோகம் அத்தனையும் அநூபவிப்பது தானே அரண்மனை வாழ்க்கை.

துறந்து செல்வதற்கு,
எதற்காக இந்த சாம்ராஜ்யம்.'
அதன்பிறகு,
மந்திரியிடம் தனியாக ஆலோசிக்கிறார் மன்னர்.

மந்திரி சொல்கிறார்,
' குழந்தை வளரும்போது,
ஆரம்பம் முதலே அரண்மனை சுகத்திலேயே வளர்த்து விட்டால்,
அந்த சுகத்திலேயே
 பழகி விட்டால், 
துறவு எண்ணம் அந்த குழந்தைக்கு எப்படி வரும் ?

வயதானவர்கள், 
நோயுற்ற மனிதர்கள் இவர்கள் எல்லாம் இந்த குழந்தையின் கண்களில் பட வேண்டாம்.

முக்கியமாக இறந்தவர்களின் பிணம்
இவன் கண்களில் 
படவேக்கூடாது.

குழந்தையின் வளர்ச்சி ஒரு அரண்மனை போகத்தையும்
தாண்டியதாக இருக்க வேண்டும்.

இளைஞன் ஆனதும், 
கொஞ்சும் மொழி பேசி மயக்கும் மிக அழகிய
பருவ மங்கையர்களின் பழக்கம்,
போதையை தந்து, அதிலிருந்து
 மீள முடியாமல் போகும்
உயர்ந்த ரக மதுவையும் கொடுத்து வளர்க்க வேண்டும். ' என்றார் மந்திரி.

அவர் சொன்னதிற்கு மேல் அதிகமான ஆடம்பரத்தில்
வளர்ந்தான் இளவரசன்.

வாலிபனாக வளர்ந்தான்.

அருமையான மனைவி,
அழகான குழந்தை,
அளவுக்கு மீறிய அரண்மனை போகம்
அத்தனையையும்
மிக சுலபமாக ஒரே இரவில் துறந்தான்.
இளவரசன்.

புத்தர் என்று 
உலக மக்களால்
போற்றி அழைக்கப்பட்டார்.

இது எப்படி சாத்தியம் ?

அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு
இந்த துறவறம்
 மட்டுமே சாத்தியம்.

நான் ( ஓஷோ ) பலமுறை
உங்களுக்கு சொல்லுவது இதுதான்.

' எதையும் மனப்பூர்வமாக
ஆழ்ந்து அனுபவித்து விட்டீர்கள் என்றால்,
அதை நீங்கள் துறக்க வேண்டாம்.
அதுவே உங்கள் 
மனதை விட்டு
 துறந்து சென்றுவிடும்.'

புத்தர் வாழ்விலும் இதுதான்
நடந்தது.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[12/22, 7:18 AM] Jagadeesh Chandra krishna: " of an empire
 A very grand palace.

 Without a royal assembly,
 A private space.

 King, Queen,
 in her lap
 Very beautiful baby.

 Reading the child's horoscope,
 Palace Astrologer

 ' This child has no structure to govern your kingdom.
 Able to give up everything
 An 'Ascetic' Horoscope'

 The king is disturbed.

 'Palace life is all about pleasure.

 to give up,
 Why this kingdom.'
 after that,
 The king consults the minister alone.

 The minister says,
 ' As the child grows,
 If from the beginning it is cultivated in palace sanctuaries,
 In that comfort
  Once you get used to it,
 How does the thought of renunciation come to that child?

 old people,
 All these sick people should not look into this child's eyes.

 Mainly the corpses of the dead
 In his eyes
 Don't shoot.

 A child's development is a palace process
 should be beyond.

 As a young man,
 She is very beautiful and speaks charming language
 Adolescent habits,
 Give the drug, and from it
  Irreversible
 High quality wine should also be given and nurtured.  ' said the minister.

 In more pomp than he said
 The prince grew up.

 He grew up as a teenager.

 lovely wife,
 beautiful baby,
 An extravagant palace
 All of it
 He gave up very easily overnight.
 Prince.

 That Buddha
 By the people of the world
 He was praised.

 How is this possible?

 For the life he lived
 This monastery
  Only possible.

 I (Osho) many times
 This is to tell you.

 ' Anything by heart
 If you have thoroughly enjoyed it,
 You don't give it up.
 That is yours
 Out of mind
  Give up and go away.'

 This is also the case in Buddha's life
 happened
By 
 Jagadeesh Krishnan is a psychologist and international Author