Sunday 21 May 2023

anandham

நீ உன்னை அனுபவிக்க முடியாவிட்டால் வேறு யாருக்கும் எதை அனுபவிக்கவும் உதவ முடியாது. நீ உன்னுடன் உண்மையில் நிறைவடையாவிட்டால், நீ மற்றவர்களுக்குச் சேவை செய்ய முடியாது, மற்றவர்கள் அவர்களுடைய நிறைவை நோக்கிச்செல்ல உதவ முடியாது. நீ உனது சொந்த ஆனந்தத்தில் நிரம்பி வழியாவிட்டால், நீ சமூகத்திற்கு ஒரு ஆபத்து. ஏனெனில் தியாகம் செய்யும் ஒருவன் எப்போதும் ஒரு துக்கம் நிரம்பியவனாகவே ஆகிவிடுகிறான். 

உன் தாய் உன்னிடம் "நான் என்னை உனக்காகத் தியாகம் செய்துள்ளேன்" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தால் அவள் உன்னை சித்திரவதை செய்பவள் ஆவாள். கணவன் மனைவியிடம் "நான் தியாகம் செய்கிறேன்" என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருந்தால் அவன் ஒரு துக்கம் நிரம்பிய சித்திரவதை செய்பவன் ஆவான். அவன் சித்திரவதை செய்வான், ஏனெனில் தியாகம் என்பது மற்றவரைச் சித்திரவதை செய்யும் ஒரு தந்திரமாகும்.

எப்போதும் தியாகம் செய்துகொண்டே இருப்பவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். - ஆபத்து நிறைந்தவர்கள் - அவர்களைக் குறித்து விழிப்புணர்வோடிரு. மேலும் தியாகம் செய்யாதே. அந்த வார்த்தையே அசிங்கமானது. உன்னை அனுபவி. ஆனந்தத்தால் நிரம்பியிரு. நீ உனது ஆனந்தத்தால் நிரம்பி வழிகையில் அந்த ஆனந்தம் மற்றவர்களையும் சென்றடையும். ஆனால் இது தியாகமல்ல. யாரும் உனக்கு கடமைப்பவர்கள் அல்ல. யாரும் உனக்கு நன்றி சொல்லவேண்டியதில்லை. மாறாக மற்றவர்களிடம் நீ நன்றியுணர்வு கொள்வாய், ஏனெனில் அவர்கள் உனது ஆனந்தத்தில் பங்கேற்றுக்கொண்டவர்கள்.

நீ ஒளியால் நிரம்பியில்லாதபொழுது எப்படி மற்றவர்கள் ஞானஒளி பெற உதவ முடியும். சுயநலமாயிரு, அப்போது மட்டுமே பிறர்நலம் பேண முடியும். மகிழ்ச்சியாக இரு, அப்போதுதான் மற்றவர்கள் மகிழ்ச்சியாயிருக்க உதவ முடியும். நீ சோகமாகவும் துயரத்துடனும் கசப்போடும் இருந்தால் மற்றவர்களிடம் நீ பலாத்காரத்தோடுதான் நடந்து கொள்வாய். மேலும் மற்றவர்களுக்குத் துன்பத்தையே உருவாக்குவாய்.

உன்னை அனுபவிப்பதில் என்ன தவறு. மகிழ்ச்சியாய் இருப்பதில் என்ன தவறு. ஏதாவது தவறு என்றால் அது மகிழ்ச்சியற்ற தன்மைதான். ஒரு மகிழ்ச்சியற்ற மனிதன் அவனைச் சுற்றிலும் மகிழ்ச்சியற்ற தன்மையின் சிற்றலைகளைப் பரவ விடுகிறான். மகிழ்வோடிரு.
ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Friday 19 May 2023

vuvekanandhar

[5/19, 6:51 PM] Jagadeesh Krishnan: VIVEKANANDA DESTROYED THE WHOLE BEAUTY OF RAMAKRISHNA
Vivekananda was an ordinary intellectual, not even of the caliber of Ouspensky, but he made Ramakrishna world famous. Ramakrishna died very early, that's why Vivekananda and Ramakrishna never parted; otherwise the parting was absolutely certain.

But Ramakrishna died and Vivekananda became his whole and sole representative. 
He dominated all the followers, he dominated the whole movement; he became for them the representative of Ramakrishna. If Ramakrishna had lived, the same thing would have happened sooner or later because Vivekananda was just head and nothing else, nothing of the heart. Even if he talks about the heart it is just head-talk, the head talking about the heart, it is not heart-full. There is no LOVE in it, there is no MEDITATION in it, there is no PRAYER in it, just INTELLECTUAL ANALYSIS. He knew the scriptures and he forced HIS IDEAS ON Ramakrishna's ideas. And Ramakrishna had died so there was nobody to say no to it.

Vivekananda destroyed the whole beauty of Ramakrishna. But that was going to happen because Ramakrishna was not a man of the head at all.

But this has not always been the case. Buddha never depended on anybody else. He was capable of moving from mind to no-mind, from no-mind to mind; that is his greatness. That is a far greater achievement than that of Gurdjieff or Ramakrishna because their achievements are in a way limited.

Buddha is very liquid; he is not solid like a rock, he is more fluid - like a river.

So was the case with Lao Tzu: he never depended on anybody else, he said whatever he had to say.

He said it himself, and as beautifully as it could be said. And their philosophies are bound to be far more pure because they come from the original man, they come from the original realization, from the very source; there is no 
VIA MEDIA. So is the case with Zarathustra, Krishna, Mahavira.
By 
Jagadeesh Krishnan psychologist and international author
[5/19, 6:53 PM] Jagadeesh Krishnan: ராமகிருஷ்ணரின் முழு அழகையும் அழித்த விவேகானந்தர்
 விவேகானந்தர் ஒரு சாதாரண அறிவுஜீவி, உஸ்பென்ஸ்கியின் தகுதியில் கூட இல்லை, ஆனால் அவர் ராமகிருஷ்ணரை உலகப் புகழ் பெறச் செய்தார்.  ராமகிருஷ்ணர் சீக்கிரமே இறந்துவிட்டார், அதனால்தான் விவேகானந்தரும் ராமகிருஷ்ணரும் பிரிந்ததில்லை;  மற்றபடி பிரிவது நிச்சயம்.

 ஆனால் ராமகிருஷ்ணர் இறந்துவிட்டார், விவேகானந்தர் அவருடைய முழு மற்றும் ஒரே பிரதிநிதியாக ஆனார்.
 அவர் அனைத்து பின்பற்றுபவர்கள் ஆதிக்கம், அவர் முழு இயக்கம் ஆதிக்கம்;  அவர் அவர்களுக்கு ராமகிருஷ்ணரின் பிரதிநிதியானார்.  ராமகிருஷ்ணர் வாழ்ந்திருந்தால், விவேகானந்தர் வெறும் தலை, வேறு ஒன்றும் இல்லை, இதயம் ஒன்றும் இல்லாததால், விரைவில் அல்லது தாமதமாக அதே விஷயம் நடந்திருக்கும்.  அவர் இதயத்தைப் பற்றி பேசினாலும் அது வெறும் தலையாட்டல், தலை இதயத்தைப் பற்றி பேசுவது இதயம் நிறைந்ததல்ல.  இதில் LOVE இல்லை, இதில் MEDITATION இல்லை, இதில் பிரார்த்தனை இல்லை, வெறும் அறிவுசார் பகுப்பாய்வு மட்டுமே.  அவர் வேதங்களை அறிந்திருந்தார், மேலும் ராமகிருஷ்ணரின் கருத்துக்களுக்கு அவர் தனது யோசனைகளை கட்டாயப்படுத்தினார்.  ராமகிருஷ்ணன் இறந்துவிட்டதால் அதை வேண்டாம் என்று சொல்ல யாரும் இல்லை.

 ராமகிருஷ்ணரின் முழு அழகையும் விவேகானந்தர் அழித்தார்.  ஆனால் ராமகிருஷ்ணர் தலைசிறந்த மனிதராக இல்லாததால் அது நடக்கப் போகிறது.

 ஆனால் இது எப்போதும் இல்லை.  புத்தர் வேறு யாரையும் சார்ந்திருக்கவில்லை.  அவர் மனதிலிருந்து நோ-மைண்ட், நோ-மைன்டில் இருந்து புத்திக்கு நகரும் திறன் கொண்டவர்;  அதுவே அவனுடைய மகத்துவம்.  குருட்ஜீஃப் அல்லது ராமகிருஷ்ணா ஆகியோரின் சாதனைகளை விட இது மிகப் பெரிய சாதனையாகும், ஏனெனில் அவர்களின் சாதனைகள் ஒரு வகையில் வரையறுக்கப்பட்டவை.

 புத்தர் மிகவும் திரவமானது;  அவர் ஒரு பாறையைப் போல திடமானவர் அல்ல, அவர் அதிக திரவம் - ஒரு நதி போல.

 லாவோ சூவின் விஷயமும் அப்படித்தான்: அவர் ஒருபோதும் யாரையும் சார்ந்திருக்கவில்லை, அவர் சொல்ல வேண்டியதைச் சொன்னார்.

 அதை அவரே, சொல்லக்கூடிய அளவுக்கு அழகாகச் சொன்னார்.  மேலும் அவர்களின் தத்துவங்கள் மிகவும் தூய்மையானதாக இருக்கும், ஏனென்றால் அவை அசல் மனிதனிடமிருந்து வருகின்றன, அவை அசல் உணர்தலில் இருந்து, மூலத்திலிருந்து வந்தவை;  இல்லை
 மீடியா வழியாக.  ஜரதுஷ்டிரா, கிருஷ்ணர், மகாவீரர் விஷயமும் அப்படித்தான்.
 மூலம்
 ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Saturday 22 April 2023

Death

உண்மையில் மரணம் என்பதே இல்லை.

மூன்று, வயதான மனிதர்கள் ஒரு பூங்காவில் உட்கார்ந்து தவிர்க்கவே முடியாத சாவைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

எழுபத்து மூன்று வயதான ஒரு கிழவர் சொன்னார்: “நான் இறக்கும் போது , எல்லோராலும் நேசிக்கப்பட்ட, ஆபிரகாம் லிங்கன் என்ற உயர்ந்த மனிதனுடன் புதைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.' 

மற்றொரு கிழவர் சொன்னார்: " "ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மனிதாபிமானி, அமைதியை விரும்புபவரான அவருடன் புதைக்கப்பட விரும்புகிறேன்''என்றார் 

பிறகு இருவரும் தொண்ணுற்று மூன்று வயதான மூன்றாவது கிழவரைப் பார்த்தனர். அவர் சொன்னார்: “நான் சோஃபியா லாரனுடன் புதைக்கப்பட விரும்புகிறேன்.

அவர்கள் இருவரும் கோபத்துடன் கேட்டார்கள் : “ஆனால் அவள் உயிருடன் இருக்கிறாள்"

அதற்கு அந்த வயதானவர் சொன்னார் : "நானும் கூடத்தான்.''

இந்த வயதானவர் அரிதானவராய் இருக்க வேண்டும். தொண்ணூற்று மூன்று வயதில் அவர் சொல்கிறார்: “நானும் கூடத்தான்," என்று.

வாழ்க்கை ஏன் சாவைப் பற்றிக் கவலைப் பட வேண்டும்? வாழ்க்கை ஏன் சாவைப்பற்றி நினைக்க வேண்டும்?

நீங்கள் உயிருடன் இருக்கும் போது பிரச்சினை எங்கே இருக்கிறது? ஆனால் மனம்தான் பிரச்சினையை உருவாக்குகிறது. பிறகு நீங்கள் குழம்பிப் போகிறீர்கள். "

சாக்ரடிஸ் இறக்கும் போது சுவாங்தஸூவிற்கு நடந்தது போலவே நடந்தது. சீடர்கள் இறுதிச் சடங்கைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்து விட்டனர். அவர்கள் அவரை, "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டனர்.

அதற்கு சாக்ரடிஸ் இப்படிப் பதில் சொன்னதாகச் சொல்கிறார்கள். “என்னுடைய எதிரிகள் என்னைக் கொல்ல விஷம் தருகிறார்கள். நீங்கள் என்னைப் புதைக்க திட்டமிடுகிறீர்கள்- எனவே இதில் நண்பன் யார்? பகைவன் யார்? நீங்கள் இருவருமே என் இறப்பிலேயே குறியாயிருக்கிறீர்கள். யாருமே என் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லை.”

மனம் எப்பொழுதும் சாவைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் உண்மையில் மரணம் என்பதே இல்லை.

எப்படி என்றால், நீங்கள் இதுவரை அடுத்தவர்களின் மரணத்தையே பார்த்திருக்கிறீர்கள். உங்களுடையதை அல்ல.

அடுத்தவர்களின் மரணம் உங்களுடையது ஆகாது.

நீங்கள் பிறந்ததே உங்களுக்கு தெரியாது. பிறகு மரணம் எப்படி உங்களுக்கு தெரியும்.

நீங்கள் தான் பிறந்திருக்கிறீர்கள் உங்களுக்கு பதிலாக வேறு யாரோ இல்லை. ஆனாலும் நீங்கள் பிறந்தது உங்களுக்கு தெரியவில்லை. அடுத்தவர் சொல்லித்தான் உங்கள் பிறப்பே தெரிகிறது.

இந்த நிலையில் உங்களுக்கு மரணம் பற்றி என்ன தெரியும்.

ஆனால் விழிப்படைந்த ஞானிகளுக்கு மரணம் தான் பிறப்பும். எந்தக் கதவு வழியாக அவர்கள் வெளியே வந்தார்களோ அதே கதவு வழியாக மீண்டும் உள்ளே செல்கிறார்கள். எனவே அவர்களுக்கு மரணம் என்ற ஒன்றே கிடையாது. பிறப்பு இறப்பு இரண்டும் ஒன்றுதான்.

இருந்தாலும் மனம் சாவை பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறது. அதாவது எதிர்காலத்தை குறித்து.

நிகழ்காலத்தில் வாழாமல் எதிர்காலத்தில் வாழ்வதுதான் உண்மையான சாவு. எவன் நிகழ்காலத்தில் வாழ்கிறானோ அதுதான் உண்மையான வாழ்வு.

ஏன் மலர்கள் இவ்வளவு அழகாக ருக்கின்றன? எதில் அவற்றின் அழகு இருக்கிறது? அது எங்கே மறைந்திருக்கிறது?

மலர்கள் இங்கே இப்போதே வாழ்கின்றன.

ஏன் இந்த மனித முகம் இவ்வளவு சோகமாய் இவ்வளவு அசிங்கமாய் இருக்கிறது? ஏனெனில் அது எப்போதுமே இங்கே இப்போதே இல்லை. அது எப்போதுமே எதிர் காலத்தில் இருக்கிறது.

அது ஒரு பிசாசைப் போன்றது. இங்கே இப்போதே நீங்கள் இல்லா விட்டால் உங்களால் எப்படி உண்மையாயிருக்க முடியும்?

உங்களால் ஒரு பிசாசாய்த்தான் இருக்க முடியும்.

இறந்த காலத்தில் பிரவேசிப்பவராகவோ எதிர் காலத்தில் நுழைபவராகவோ தான் இருப்பீர்கள்.

நிகழ்காலமே வாழ்வு. நிகழ்காலமே தெய்வீகம்.

அந்த நிலையில் மரணம் என்பதே இல்லை.

ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Thursday 20 April 2023

yoga

யோகா என்பது தூய அறிவியல். 

மேலும் யோக உலகத்தைப் பொறுத்த வரையில் பதஞ்சலி என்பது மிகப் பெரிய பெயர். 

இந்த மனிதர் அரிதானவர், 

பதஞ்சலிக்கு இணையான வேறு பெயர் இல்லை. 

மனிதகுல வரலாற்றில் முதன்முறையாக இந்த மனிதன் மதத்தை அறிவியல் நிலைக்கு கொண்டு வந்தான். 

மதத்தை அறிவியலாக ஆக்கினார்; 

தூய சட்டங்கள், 

நம்பிக்கை தேவையில்லை.
 
மதங்கள் என்று அழைக்கப்படுபவைகளுக்கு நம்பிக்கைகள் தேவை. 

ஒரு மதத்திற்கும் மற்றொரு மதத்திற்கும் வேறு வேறுபாடு இல்லை; 

வேறுபாடு நம்பிக்கைகளில் மட்டுமே உள்ளது. 

ஒரு முகமதியனுக்கு சில நம்பிக்கைகள் உண்டு, இந்துவுக்கு சில நம்பிக்கைகள், ஒரு கிறிஸ்தவனுக்கு சில நம்பிக்கைகள் உண்டு.

 வேறுபாடு நம்பிக்கைகளில் உள்ளது. 

நம்பிக்கையைப் பொறுத்த வரை யோகாவில் எதுவும் இல்லை; எதையும் நம்ப வேண்டும் என்று யோகா கூறவில்லை. 

யோகா "அனுபவம்" என்று கூறுகிறது. 

விஞ்ஞானம் "பரிசோதனை" என்று சொல்வது போல் "அனுபவம்" என்று யோகா கூறுகிறது. 

பரிசோதனை மற்றும் அனுபவம் இரண்டும் ஒன்றே; 

அவர்களின் திசைகள் வேறுபட்டவை. 

பரிசோதனை என்றால் வெளியில் ஏதாவது செய்வது

அனுபவம் என்றால் உள்ளே ஏதாவது செய்வது 

அனுபவம் ஒரு உள் சோதனை 

அறிவியல் கூறுகிறது,

 "நம்பாதீர்கள், உங்களால் முடிந்தவரை சந்தேகப்படுங்கள்," 
என அறிவியல் கூறுகிறது

நம்பாமல் இருக்காதீர்கள்" - 
ஏனெனில் அவநம்பிக்கை மீண்டும் ஒரு வகையான நம்பிக்கையாகும். 
என்கிறார் பதஞ்சலி

நீங்கள் கடவுளை நம்பலாம், அல்லது கடவுள் இல்லை என நம்பலாம். 

 வெறித்தனமானமாக கடவுள்   இருக்கிறார் என்று நீங்கள் கூறலாம்; 

அதே வெறித்தனத்துடன் கடவுள் இல்லை என்று நீங்கள் முற்றிலும் தலைகீழாகச் சொல்லலாம். 

நம்பிக்கை என்பது அறிவியலுக்கான களம் அல்ல. 

விஞ்ஞானம் என்றால் எதையாவது அறிய நம்பிக்கை தேவையில்லை."

பதஞ்சலியும் அப்படியே அவர் கூறிய முறைகளை துல்லியமாக, சரியாக பின்பற்றினால்
கடவுளை நீங்கள் உணரலாம், அறியலாம்,அனுபவிக்கலாம்


பதஞ்சலி யோகம் ஓர் விஞ்ஞான விளக்கம்

Thursday 30 March 2023

life

[3/31, 8:37 AM] Jagadeesh Krishnan: Life is unpredictable, but people are predictable! This creates the dichotomous mind. Life takes us in one direction and people in another! To watch this drama is interesting and teaches one about self and others. 

The  article on the power of intention had evoked many comments. I read each comment with interest and even engaged with many by replying to them. As I was doing that action, I was observing what I felt. It was revealing to me that I was neutral with all comments. This state of balance made me feel thankful for all the ( dislike) comments that were put up and I realised that you can be grateful for all things that come to us. 

In life we have two options. Either to move upwards on the ladder of life or downwards in the abyss of depression. When we are faced with a difficult situation, if we pause a little and respond, an appropriate response to the within can be executed. The trick is “ TO PAUSE.” 

It is said, “ The moment you witness a thought, it dies and the more you engage with a thought, it feeds.”  So the trick is not to engage with the thought but witness it.  Who will engage with a  ‘ disturbing thought’ knowing fully that it’s going to cause discomfort ? Obviously an egoistic person, who can’t consider being wrong? 

 Who is an Egoistic person?  In the Bhagwad Gita Chapter 15. It is said that an egoistic person is some one who considers the unimportant things important!  He sees what is NOT THERE AS THERE! 

So when someone shoots an arrow towards you know if it needs a response or can you ignore it. Is the comment evoking anger, then your ego will be brought to play and you will see what is not there. 

I recall when my dearest relative who recently passed away remarked condescendingly on my work. Instead of getting defensive, I paused and weighed what it made me feel! I realised that the relationship meant more to me than seeing this comment as being important. My ego didn’t get a chance to get the better of me! If we weigh the situation well, our ego will slowly die and we will feel liberated of it!
By
Jagadeesh Krishnan psychologist and international author
[3/31, 8:37 AM] Jagadeesh Krishnan: வாழ்க்கை கணிக்க முடியாதது, ஆனால் மக்கள் கணிக்கக்கூடியவர்கள்!  இது இருவேறு மனதை உருவாக்குகிறது.  வாழ்க்கை நம்மை ஒரு திசையிலும், மக்களை இன்னொரு திசையிலும் அழைத்துச் செல்கிறது!  இந்த நாடகத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமானது மற்றும் ஒருவருக்கு தன்னைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் கற்பிக்கிறது.

 எண்ணத்தின் சக்தி பற்றிய கட்டுரை பல கருத்துக்களைத் தூண்டியது.  நான் ஒவ்வொரு கருத்தையும் ஆர்வத்துடன் படித்தேன், பலருக்குப் பதிலளித்து அவர்களுடன் ஈடுபட்டேன்.  நான் அந்த செயலைச் செய்யும்போது, ​​நான் உணர்ந்ததைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.  எல்லாக் கருத்துக்களிலும் நான் நடுநிலையோடு இருந்தேன் என்பதை வெளிப்படுத்தியது.  இந்த சமநிலை நிலை, போடப்பட்ட அனைத்து (விரும்பவில்லை) கருத்துக்களுக்கும் என்னை நன்றியுடன் உணர வைத்தது, மேலும் எங்களிடம் வரும் அனைத்து விஷயங்களுக்கும் நீங்கள் நன்றியுடன் இருக்க முடியும் என்பதை உணர்ந்தேன்.

 வாழ்க்கையில் நமக்கு இரண்டு வழிகள் உள்ளன.  ஒன்று வாழ்க்கையின் ஏணியில் மேல்நோக்கி நகர்வது அல்லது மனச்சோர்வின் படுகுழியில் கீழ்நோக்கிச் செல்வது.  நாம் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, ​​​​கொஞ்சம் இடைநிறுத்தப்பட்டு பதிலளித்தால், உள்ளுக்கு பொருத்தமான பதிலைச் செயல்படுத்த முடியும்.  தந்திரம் "இடைநிறுத்தம்".

 "நீங்கள் ஒரு எண்ணத்தைக் காணும் தருணத்தில், அது இறந்துவிடும், மேலும் நீங்கள் ஒரு எண்ணத்தில் ஈடுபடும்போது, ​​​​அது உணவளிக்கிறது" என்று கூறப்படுகிறது.  எனவே தந்திரம் என்பது சிந்தனையுடன் ஈடுபடாமல் அதற்கு சாட்சியாக இருப்பது.  அசௌகரியத்தை உண்டாக்கப் போகிறது என்பதை முழுமையாக அறிந்திருந்தும், ‘கவலையூட்டும் எண்ணத்துடன்’ யார் ஈடுபடுவார்கள்?  வெளிப்படையாக ஒரு அகங்கார நபர், யார் தவறாக கருத முடியாது?

  ஒரு அகங்கார நபர் யார்?  பகவத் கீதை 15வது அத்தியாயத்தில், முக்கியமில்லாத விஷயங்களை முக்கியமானதாகக் கருதுபவர் தான் அகங்காரவாதி என்று கூறப்படுகிறது!  இல்லாததை அங்கேயே பார்க்கிறான்!

 எனவே யாராவது உங்களை நோக்கி அம்பு எய்யும் போது அதற்கு பதில் தேவையா அல்லது நீங்கள் அதை புறக்கணிக்க முடியுமா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  கருத்து கோபத்தை வரவழைக்கிறதா, உங்கள் ஈகோ விளையாட கொண்டு வரப்படும், இல்லாததை நீங்கள் காண்பீர்கள்.

 சமீபத்தில் காலமான எனது நெருங்கிய உறவினர் எனது வேலையைப் பற்றி இரங்கல் தெரிவித்தது எனக்கு நினைவிருக்கிறது.  தற்காப்புக்கு பதிலாக, நான் இடைநிறுத்தப்பட்டு, அது என்னை உணர்ந்ததை எடைபோட்டேன்!  இந்தக் கருத்தை முக்கியமானதாகப் பார்ப்பதை விட, அந்த உறவு எனக்கு அதிகம் என்பதை உணர்ந்தேன்.  என் ஈகோ என்னை நன்றாகப் பெற வாய்ப்பு கிடைக்கவில்லை!  நாம் நிலைமையை நன்றாக எடைபோட்டால், நமது ஈகோ மெல்ல மெல்ல அழிந்து, அதிலிருந்து விடுதலை பெறுவோம்!
 மூலம்
 ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Monday 20 March 2023

jagadeesh Krishnan psychologist

[3/19, 12:12 PM] Jagadeesh Krishnan: ஒரு மிருகக் காட்சி சாலையில் புதிதாக ஒரு சிங்கத்தை கொண்டு வந்தனர். 

அந்த சிங்கம் இளமையாக துடிப்பாக இருந்தது. 

அதே மிருகக் காட்சி சாலையில் இன்னொரு கிழட்டு சிங்கமும் இருந்தது. 

அந்த கிழட்டு சிங்கம் எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கும். 

அதனால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்து போய் விடுவார்கள். 

இதைக் கண்ட இளைய சிங்கம் தனது வித்தையை காட்டியது. 

ஓவென வாயைப் பிளந்து ஆக்ரோஷமாக கர்ஜித்தது. 

இதனைக் கண்டு பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர் .

கைதட்டி ரசித்தனர். 

நாளுக்கு நாள் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை அதிகரித்தது. 

இளம் சிங்கத்தைப் பார்க்க பலர் குழந்தைகளுடன் திரண்டு வந்தனர். 

இந்த சிங்கமும் அவர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்காக கர்ஜனை செய்து மகிழ்வூட்டியது. 

ஆனால் அந்த பூங்காவின் ஊழியர்கள் உணவு கொண்டு வரும் போது கிழட்டுச் சிங்கத்திற்கு குதிரை இறைச்சியை கொண்டு வந்தனர். 

அந்த கிழட்டுச் சிங்கமும் அதை சாப்பிட்டு தூங்கிவிடும். 

ஆனால் இந்த இளம் சிங்கத்துக்கு ஆரஞ்சுப் பழங்களும் வாழைப்பழங்களும் வேர்க்கடலையும் கொண்டு வந்தனர். 

தினமும் இது தொடரவே பொறுமை இழந்த இளம் சிங்கம் ஒரு ஊழியரை அழைத்தது.

 "நான் இத்தனை பார்வையாளர்களை வரவைத்திருக்கிறேன். 

ஆனால் எனக்கு இரைச்சியைத் தராமல் ஆரஞ்சு வாழைப்பழம் தருகிறீர்கள், அந்த கிழட்டுச் சிங்கம் எதவும் செய்யாமல் சதா படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு மட்டும் நல்ல நல்ல இறைச்சியைக் கொண்டு வருகிறீர்களே இது நியாயமா "என்று புலம்பியது. 

அப்போது அந்த ஊழியர் சொன்னார் .

எங்கள் பட்ஜெட்டில் ஒரு சிங்கம் தான் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 

அதற்குத்தான் இரைச்சி வாங்கிப் போடுகிறோம்.

 உன்னை இன்னும் சிங்க கணக்கில் சேர்க்கவில்லை. 

ஒரு குரங்கு கணக்கில் சேர்த்து வைத்துள்ளோம். 

அதனால்தான் குரங்குக்கு தரும் உணவைத் தருகிறோம்

அறிவு என்பது ஆள் ஆளுக்கு வேறுபடுகிறது

 நீ உன்னை எப்படி வேண்டுமானாலும் நினைத்து கொள்ளலாம்

   ஆனால் பிறர் உன்னைப்பற்றி, உனது செயலைப்பற்றி உன்னைப்போலவே நினைப்பதில்லை
ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[3/19, 12:13 PM] Jagadeesh Krishnan: A new lion was brought to a zoo.

 The lion was young and vibrant.

 There was another baby lion in the same zoo.

 That giant lion is always sleeping.

 So the audience will leave disappointed.

 Seeing this, the young lion showed his trick.

 Owena let out an aggressive roar.

 The audience was excited to see this.

 Applauded.

 The number of visitors to the park increased day by day.

 Many people flocked with children to see the young lion.

 This lion also roared and entertained them as a good pastime.

 But when the park staff brought food, they brought horse meat to the lion.

 That baby lion also eats it and falls asleep.

 But they brought oranges, bananas and peanuts to this young lion.

 The young lion, impatient to continue this day after day, called a servant.

  “I've had so many visitors.

 But you don't give me meat and give me orange banana, that baby lion is lying down and sleeping without doing anything.  But is it fair that you bring good meat just for that,” he lamented.

 Then the employee said.

 A lion's share of our budget has been credited.

 That is why we buy meat.

  You haven't been added to the lion count yet.

 Added to a monkey account.

 That's why we give monkey food

 Knowledge varies from person to person

  You can think of yourself however you want

    But others don't think the same way about you and your actions
 Jagadeesh Krishnan is a psychologist and international author

Monday 13 March 2023

goddleness

உண்மையான பரிசு!

ஐந்து வயது சிறுமி அமுதா,
 தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள். 
அங்கே ஒரு முத்துமாலையை பார்த்தாள். அது வேண்டுமென அம்மாவிடம் அடம்பிடித்தாள்.

“அம்மு... இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே.. தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை... 

நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி 'ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்' மாலை வாங்கி தரசொல்றேன்... இது வேண்டாம்மா" என்றாள் அம்மா.

ஆனால் அமுதா, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள்...

அமுதாவுக்கு அந்த முத்துமாலை மிகவும் ஃபேவரெட் ஆன பொருளாகிப்போனது. 

அதை எங்கு சென்றாலும் அணிந்திருந்தாள்/ உடன் வைத்திருந்தாள். 

பள்ளிக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் விளையாடும்போதும், ஏன் படுக்கும்போது கூட உடன் கழுத்தில் போட்டிருந்தாள்.

பிளாஸ்டிக் மாலையை கழுத்திலேயே போட்டிருந்தாள். அலர்ஜியால் கழுத்து நிறம் மாறி விடும் என என்னென்னவோ அம்மா சொல்லியும் கூட கேட்கவில்லை.  எப்போதும் அதைப் பிரிய மனமில்லை அவளுக்கு.

அமுதாவின் அப்பா மிகவும் அன்பானவர். தினமும் அவர் அமுதாவுக்கு படுக்கும் முன் கதை சொல்வார். ஒரு நாள் கதை சொல்லி முடித்ததும் கேட்டார், “அம்மு... என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்.”

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?”

“ஓ.. முடியாதுப்பா... நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. என்னோட பிங்கி பொம்மையை வேணா எடுத்துக்கோங்க.. ஆனா முத்துமாலை மட்டும் தர மட்டேன்ம்பா...” என்றாள்.

"பரவால்லை குட்டிம்மா..."  என்று புன்னகையுடன் பதில் சொன்னார் அப்பா.

இன்னொரு நாள் மீண்டும் கேட்டார், “அம்மு... என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்” -அமுதா

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?” மீண்டும் கேட்டார்.

“ஓ.. முடியாதுப்பா... நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. வேணும்னா என்னோட குதிரை பொம்மையை எடுத்துக்கோங்க... முத்துமாலைய மட்டும் கேக்காதீங்கப்பா ப்ளீஸ்... அதமட்டும் நான் தர மட்டேன்.” என இம்முறையும் அழுத்தமாக மறுத்தாள் அமுதா.

இப்போதும் அதே புன்னகையுடன் “பரவாயில்லை குட்டி..” என்றார் அப்பா.

சில நாட்களுக்கு பிறகு ஒருநாள், அப்பா இரவு கதை சொல்ல வந்தபோது.... அமுதா ஒரு தயக்கத்துடன், “இந்தாங்கப்பா...” என சொல்லிக் கொண்டே ஒரு சிறிய பெட்டியை திறந்து அதிலிருந்த அவளின் விருப்பமான முத்துமாலையை எடுத்து அப்பாவின் கைகளில் தந்தாள். அது பழசாகியும்... சில முத்துக்கள் உடைந்தும் போயிருந்தன.

அதை ஒரு கையில் வாங்கிக் கொண்ட அப்பா, மறுகையால் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு நீல வெல்வெட் பெட்டியை எடுத்தார். அதில் உண்மையான முத்துக்களால் ஆனா ஒரு அழகிய முத்துமாலை இருந்தது.

அவர் அதை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். அமுதா தன் மலிவான மாலையை தருவதற்காக காத்திருந்தார் அவர்... அதை தந்தவுடன் அந்த உண்மையான மாலை தந்தார்.

"இதை உனக்கு தருவதற்காகத்தான்டா அம்மு... நான் தினமும்  அந்த ப்ளாஸ்டிக் மாலையை கேட்டேன்..." என்றார் அப்பா.

இந்த தகப்பன் யாருமல்ல... நம் எல்லோருக்கும் தந்தையான இறைவன்...
அந்த குழந்தை தான் நாம்.

ஆம். இதுபோலத்தான் நாமும் நம் வாழ்க்கையில் சில மலிவான விஷயங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கைவிடுவதற்கு தயாராக இல்லை.

*அத்தகையான போலியான விசயங்களை கைவிட்டால் இறைவன் உண்மையான ஒன்றை நமக்கு பரிசளிப்பான்.*

நமது மோசமான  பழக்கங்கள், செயல்கள், தீய நட்புகள்/ உறவுகள்... போன்ற எது வேண்டுமானாலும்  நம்முடன் மிகவும் பின்னிப் பிணைந்திருக்கலாம்.. அவைகளால் நமக்கு பாதிப்பு என தெரிந்தும் கூட கைவிட கடினமானவைகளாக இருக்கலாம்...

ஆனால் அவைகளை எல்லாம்விட சிறந்தவைகள் நமக்காக காத்திருக்கின்றன.... அத்தகைய சிறப்பான ஒன்றை பெறவேண்டுமானால்... போலியான மலிவான விசயங்களை நாம் கைவிட வேண்டும்.

அன்பே வடிவான இறைவன் சிறந்த ஒன்றை தராமல் நம்மிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்வதில்லை...
ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்